ஒரு விதை
நம்மைச் சுற்றியுள்ள யாவும் ஏதோ ஒன்றை நம்மிடம் சொல்லியபடிதான் உள்ளது. சிலர் அதை அறிந்துகொள்கிறோம். பலர் அதனை அறிவதில்லை. ஆம்!
*
ஒரு விதை –
ஒரு மரம்..
சிறு துளி –
பெரு கடல்..
அடி தரை –
நுனி மலை..
ஒரு முதல் –
ஒரு முடிவு..
யாவும் யாவும் யாவும் இங்கு –
ஏதோ ஒன்றை சொல்ல..
யாரும் யாரும் யாரும் எங்கும் –
ஏதோ ஒன்றை கேட்க..
வானும் மண்ணும் காற்றும் இங்கு –
தானாய் தானாய் நில்ல..
ஆசை மோகம் தாகம் என்றும் –
வேறாய் வேறாய் இருக்க..
*
புதுமைகள் என இங்கு ஒன்றுமில்லை –
புரிந்திடும் மனம் அதில் எல்லையில்லை..
முடியாதென இங்கு எதுவும் இல்லை –
துணிந்திடும் உள்ளத்தில் பயம் இல்லை..
விடியல் இல்லாத நாட்கள் எதுவுமில்லை –
நம்பிக்கை கொண்டுவிட்டால் தோல்வியில்லை..
நிலைத்திடும் கவலைகள் என்றுமில்லை –
பொழிந்திடும் மழை அதில் பேதமில்லை..
காலந்தோறும் காலந்தோறும் –
மாற்றம் நிகழ்ந்திட வேண்டும்..
இல்லையென்றால் வாழ்க்கை இங்கே –
இல்லை ஆகிப்போகும்..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.