தந்திரா
தன்னுள் நுழைந்து தன்னை வைத்த தந்திரக்காரனைப் பார்த்து சொல்கிறாள், தனக்குள் அழைத்து தன்னினை தைத்த மந்திரக்காரன் கேட்கிறான்.
*
பெ: தந்திரா! தந்திரா!
எனக்குள்ள நொழஞ்சி –
ஒன்ன வச்ச..
மந்திரா! மந்திரா!
ஒனக்குள்ள அழச்சி –
என்ன தச்ச..
ஆ: தந்திரி! தந்திரி!
ஒனக்குள்ள நொழஞ்சா –
என்ன வச்சன்..
மந்திரி! மந்திரி!
எனக்குள்ள அழச்சா –
ஒன்ன தச்சன்..
பெ: அட ஒளிக்குள்ள ஒளிக்குள்ள இருளுண்டு –
அந்த இருளுக்குள் இருளுக்குள் ஒளிகொண்டு..
ஏ மைமை மைமை படிச்சன் படிச்சன் –
தந்திரமா மந்திரமா..
ஆ: ஏ மெய்மை மெய்மை எடுத்தன் எடுத்தன் –
நித்தியமா சத்தியமா..
பெ / ஆ : அட ஒளிக்குள்ள ஒளிக்குள்ள இருளுண்டு –
அந்த இருளுக்குள் இருளுக்குள் ஒளிகொண்டு..
*
பெ: எந்திரக்காரா –
எனை ஏந்திப்போடா..
சந்திரக்காரா –
உனை ஈந்துப்போடா..
ஆ: ஐந்திணைக்காரி –
ஐயம் தீர்த்துப்போடி..
ஐந்திறக்காரி –
ஐயை சேர்த்துப்போடி..
*
குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.