நெஞ்சாங்குழி
நெஞ்சாங்குழி நிறைந்துவிட்டது. தேகம் அரும்பி சிரிக்குது. ஆத்தி ஆத்தி என அதற்கு காரணமான அவனவளைப் பார்த்து வியக்கிறான்.
*
நெஞ்சாங்குழி நெறம்பி கெடக்குது –
தேகம் எங்கும் அரும்பி சிரிக்குது –
ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..
தூறல் வந்து கொஞ்சி போகுது –
வீணை வாசம் மெல்ல இழுக்குது –
ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..
நாணம் என்ன?
வானம் என்ன?
ஏதோ சரிதானோ!
ராகம் என்ன?
தாகம் என்ன?
தானோ அறியாதோ!
*
துடிக்கும் இதயம் அது –
படிக்கும் வேஷம் கொண்டு –
காதல் படித்திடுமே..
நடக்கும் கால்கள் அது –
நடிக்கும் வேஷம் கொண்டு –
காதல் நடித்திடுமே..
நாணம் என்ன?
வானம் என்ன?
ஏதோ சரிதானோ!
ஏதோ சரிதானோ!
ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.