உதிரும் இலைகள்
உதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!
*
உதிரும் இலைகள் –
கிளையில் சேரா…
உகுக்கும் கண்ணீர் –
கண்ணுள் போகா…
ஓடும் நதிகள் –
திரும்பி ஏகா…
எல்லாம் பாடம் இங்கே…
சிந்தும் விண்ணீர் –
விண்ணில் வீழா…
பிரியும் இறகு –
சிறகில் கோரா…
முடியும் நாட்கள் –
திரும்ப வாரா…
எதிலும் பாடம் இங்கே…
*
கண்கள் காணும் யாவும் –
நிஜமில்லை…
இதயம் அறியும் எதுவும் –
பொய்யில்லை…
உலகப் படைப்பில் ஒன்றும் –
நிலையில்லை…
இதனைப் புரிந்தால் துன்பம் –
இனியில்லை…
உதிரும் இலைகள்…
உகுக்கும் கண்ணீர்…
ஓடும் நதிகள்…
இங்கே…
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.