மஞ்சள் மேகமே

மஞ்சள் மேகத்தை தூதாக அனுப்பி, தன் காதலனிடம் போய் தன்னைப் பற்றி எத்தகவலையும் சொல்லாமல், தன் உள்ளக் காதலையும், அதன் செல்ல மோதலையும் சொல்லச் சொல்கிறாள்.

*

ஓ! மஞ்சள் மேகமே –

உன்னிடம் ஒன்று சொல்கிறேன்..

போய் அவனிடம் சொல்லி வருவாயா?

நீ! சொல்லி வந்தால் –

கேட்டதை தாண்டியும் தருகிறேன்..

போய் அவனிடம் சொல்லி வருவாயா?

நான் யாரென உரையல் –

என் பேரென்ன உரையல்..

என் ஊரென்ன உரையல் –

என் பணியென்ன உரையல்..

நான் எங்கென உரையல் –

என் மொழியென்ன உரையல்..

என் வழியென்ன உரையல் –

என் திறமென்ன உரையல்..

பின்னையும் உரை நீ…

*

என் உள்ளக் காதலை –

அதன் செல்ல மோதலை –

அதால் அரும்பும் உளறலை –

அவற்றின் அழகுத் துள்ளலை..

போதும்! போதும்!

போதும்! போதும்!

போதும்!

*

குரல் : ரம்யா மேனன்                   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=