ஓடிடும் கால்களே

நாம் உண்ணும் உணவின் நெல்மணி எங்கே விளைந்தது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா? ஓடிக்கொண்டிருக்கும் நம் கால்களை நிறுத்தி, தேடிக்கொண்டிருக்கும் நெஞ்சத்திடம் கேட்டால் என்ன?

*

ஓடிடும் கால்களே –

ஒற்றை நிமிடம் நில்லுங்கள்..

தேடிடும் நெஞ்சத்தை –

நிறுத்தி மெல்லக் கேளுங்கள்..

நீ உண்ணும் உணவின் நெல்மணி –

எங்கே விளைந்தது தெரியுமா?

நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றது –

எங்கே இருந்தது தெரியுமா?

*

கேள்விகள் என்பது உள்ளவரை –

மண்மீது மகத்துவம் நிகழும்..

பதில்கள் என்பது இருக்கும்வரை –

உயிர்கள் சிறப்புடன் வாழும்..

மனிதம் என்பது துளிர்க்கும்வரை –

மனதில் உன்னதம் பிறக்கும்..

அன்பு என்பது உதிக்கும்வரை –

பூமி நில்லாமல் சுழலும்..

ஓடிடும் கால்களே –

ஒற்றை நிமிடம் நில்லுங்கள்..

தேடிடும் நெஞ்சத்தை –

நிறுத்தி மெல்லக் கேளுங்கள்..

*

குரல் : மீனாட்சி தேவராஜன்                  

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை            

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=