சல சலக்கும்
காற்றில் பாடல் ஒலிக்கக் கேட்டிருப்போம். காற்றே பாடலாய் ஒலிக்க கேட்டதுண்டா?
*
சல சலக்கும் காற்று –
என்ன சொல்லும்?
சிலு சிலுக்கும் கவிதை –
சொல்லிப் போகும்..
பட படக்கும் காற்று –
என்ன செய்யும்?
தட தடக்கும் காயம் –
அள்ளிப் போகும்..
புரிந்தும் புரியா –
மொழிகள் பேசும்..
இருந்தும் இல்லா –
வழிகள் காட்டும்..
*
மரங்களின் காதலன் – அவன்
மலைகளின் மோதலன்..
நதிகளின் பாடகன் – அவன்
தனிமையின் நண்பன்..
இலைகளின் ஆடகன் – அவன்
மலர்களின் வாசகன்..
உயிர்களின் தேடகன் – அவன்
இசையின் இறைவன்..
இதமா –
இசையா –
இனிதா –
அமுதா..
புதிதா –
புதிரா –
விடையா –
துணையா..
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.