பொல்லாத காதல்
தானாக இருந்தவனை இந்தப் பொல்லாத காதல் வந்து யாரோவாக செய்துவிட, எங்கே போய் தேடுவதெனத் தெரியாமல் தவிக்கிறான்.
*
இந்தப் பொல்லாத காதல் வந்து –
என்னை யாரோ செய்துவிட –
எங்கே நானும் தேடுவதோ?
அந்த நில்லாத மோதல் தந்து –
என்னில் ஏதோ எய்துவிட –
எப்போ அதைப் பாடுவதோ?
சுத்தி முத்திலும் –
எதுவும் என்னைப் பார்க்கல..
சொந்த பந்தங்கள் –
யாரும் என்னிடம் பேசல..
ஏய் காதலே காதலே –
ஏன் இப்படிப் படுத்தற படுத்தற..
மென் சாதல சாதல –
தந்தென்ன உடுத்தற உடுத்தற..
*
வேண்டும் என்பதா?
வேண்டாம் என்பதா?
கண்ணை கட்டிக் காட்டுல விட்டக் –
கதைதான் இந்தக் காதலு..
இன்பம் என்பதா?
துன்பம் என்பதா?
அட தூங்கவிட்டு எழுப்பிப் போகும் –
வதைதான் இந்தக் காதலு..
இம்சை இம்சை இனிக்கும் இம்சைதான்.. ஆ.. ஆ..
தொல்லை தொல்லை பிடிக்கும் தொல்லைதான்.. ஊ.. ஊ..
ஏய் காதலே காதலே –
ஏன் இப்படிப் படுத்தற படுத்தற..
மென் சாதல சாதல –
தந்தென்ன உடுத்தற உடுத்தற..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.