கூகுள் ராஜா
கேட்டதைத் தாண்டி, கேட்காததையும் அள்ளி அள்ளித் தருபவன் ராஜாவாகத்தானே இருக்கமுடியும். ஆம்!
*
கூகுள் ராஜா வந்தான் –
கேட்டதையெல்லாம் தந்தான் –
கேட்காததையும் தந்தான் –
அள்ளி பக்கம்பக்கமாய்..
கூகுள் ராஜா சொன்னான் –
மெய்யும் பொய்யும் சொன்னான் –
பொய்யும் மெய்யும் சொன்னான் –
தீர வண்ணவண்ணமாய்..
ஒன்றை கேட்டால் ஒன்பதை சொல்வான் –
நொடியில் உலகை கையில் தருவான்..
எத்தனை தந்தாலும் வாங்கிக் கொள்வான் –
சொன்னதை சொன்னாலும் கேட்டுக் கொள்வான்..
இவனைப் போல திறமி இல்லை –
இவனைப் போல சமத்தன் இல்லை..
இவனைப் போல புதியன் இல்லை –
இவனைப் போல வியப்பன் இல்லை..
கூகுள் ராஜா…
*
அந்த சங்கப் புலவன் வந்தால் கூட –
மகிழ்ந்து இவனைப் பாடிப்போவான்..
உலகை வெல்லும் ஆற்றல் கொண்ட மன்னன்..
இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கூட –
இவனைக் கண்டு வியந்து நிற்பான்..
இல்லை என்னும் உள்ளம் படைத்த வள்ளன்..
கூகுள் ராஜா…
*
குரல் : கோல்டு தேவராஜ்
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.