இரவே இரவே
இரவை உறவாக எண்ணுவோர் கலைஞராக இருப்பர். அதிலும், மெல்லுறவாக நினைத்து அதன் விரல் சேர்த்து இதம் கொள்வோர் கவிஞராக மட்டுமே இருப்பர்.
*
இரவே இரவே நள்ளிரவே –
உன் மடிமீது நான் சாய்ந்து –
துயில் கொள்ளவா?
உறவே உறவே மெல்லுறவே –
உன் விரலோடு விரல் சேர்த்து –
இதம் கொள்ளவா?
யாரும் போகாத வழி செல்லவா?
முடியாத கனவாகி விடை சொல்லவா?
அதிகாலை உனை எடுத்து –
எனில் வைக்கவா?
*
இல்லாத சொல் கொண்டு –
உனை மீட்டவா?
நில்லாத இசை அள்ளி –
உனில் தீட்டவா?
சொல்லாத பந்தத்தில் –
உனை அழைக்கவா?
கேட்காத முத்தத்தில் –
உனை நனைக்கவா?
*
குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.