ஒரு போர்க்களம்
உயிரைவிட கடமையை பெரிதாய் நினைப்பவர்கள் உயர்ந்தோர் ஆகிறார்கள். சுகத்தை விட வலியை பெரிதாய் கருதுபவர்கள் கடவுளுக்கு நிகராகிறார்கள்.
*
ஒரு போர்க்களம் –
அதில் விழித்திடும் –
மனம் மனம் அது பூக்களம்..
எது வந்தினும் –
எதிர் நின்றிடும் –
உளம் உளம் அது தீக்களம்..
உயிர் அதைவிட கடமை பெரிது –
சொல் அதைவிட செயல்தான் பெரிது..
சுகம் அதைவிட வலியே பெரிது –
உறக்கம் அதைவிட விழிப்பே பெரிது..
வீரனே…
*
விடியலும் –
முடியலும் –
இல்லாத வாழ்க்கை..
சிறுமைகள் –
பெருமைகள் –
கொள்ளாத உள்ளம்..
காலமும் –
காட்சியும் –
கண்டு ஓடாதோர்..
இலக்குகளும் –
துணிவுகளும் –
கொண்ட சொந்தங்கள்..
மலர் அதைவிட முள்ளே பெரிது –
எளிமை அதைவிட வலிமைதான் பெரிது..
வியர்வை அதைவிட ரத்தம் பெரிது –
இல்லம் அதைவிட தேசமே பெரிது..
வீரனே வா…
*
குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்
உயிரோவியம் : மீரா
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.