மழையைக் கூட்டி
‘மழையைக் கூட்டி வரவா?’ எனக் கேட்பவனிடம், ‘கூந்தல் கோதிவிட வா’ என்கிறாள். இன்னும் கேட்கிறான், இன்னும் சொல்கிறாள்.
*
ஆ: மழையைக் கூட்டி வரவா –
மேகம் அள்ளித் தரவா..
மின்னல் பறித்து வரவா..
மெத்தை ஆகி விடவா..
சொல் சொல் சொல் சொல் –
காதல் மலரே..
பெ: கூந்தல் கோதி விட வா –
காதல் பூசும் படவா..
ஆடை ஆகி விட வா –
ஆழம் வரை தரவா..
நில் நில் நில் நில் –
ஞாழல் மலரே..
*
ஆ: கண்ணக் காட்டியே –
ஏன்டி என்னக் கவுக்குற?
வட்டம் போட்டு –
அடக்கி என்ன ஆளுற..
பெ: பக்கம் எழுதியே –
நீயும் என்ன மாய்க்குற..
பட்டம்போல –
பறக்கவிட்டு இழுக்குற..
ஆ: சொல் சொல் –
காதல் மலரே..
பெ: நில் நில் –
ஞாழல் மலரே..
*
குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.