ஐயா (எ) 95 வயது குழந்தை! – ஒரு வாழ்த்தும் ஒரு நம்பிக்கையும்

அருமைத் தம்பி வடிவரசு (அவரை தம்பி என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்) `ஐயா என்ற 95 வயது குழந்தை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்து மனிதரின் அன்றாட நிகழ்வுகளை மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார். கூடவே வடிவரசு பற்றியும் இந்தப் புத்தகத்தில் காண முடிகிறது. நீசத்தண்ணி, மக்க மண்ணு என்று கிராமத்து நடையை அதிகமாக பார்க்க முடிகிறது.
வடிவரசு திரைப்பட பாடலாசிரியராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராக வலம் வருவார் என்று நம்புவோம்.
– எம். மரிய பெல்சின்
*
சற்று முன்புதான் நிகழ்ந்தது இந்த பாசச்சந்திப்பு. அன்புச் சகோதரர் வடிவரசு, தன் தந்தையான 95 வயது குழந்தைக்கு தான் சூட்டிய புத்தக ஆரத்தை அன்போடு எனக்களித்தார்.
இதுவரை யாரும் தங்கள் தந்தைக்கு இப்படியோர் பிறந்தநாள் பரிசை அளித்திருக்க மாட்டார்கள். அப்படியோர் அற்புத பரிசுதான் வடிவரசுவின் ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ என்கிற நூல்.
இந்நூல் வாசிக்கிற எவரையும் ஈர்த்து நாமும் நம் தந்தைக்கு ஏதோ ஓர் அற்புத அளிப்பை செய்ய வேண்டும் என்று தூண்டும். அல்லது செய்யத் தவறிவிட்டோமே என்று ஏக்கத்திலும் ஆழ்த்திவிடும்.
வாழ்த்துகள் வடிவரசு… உயர்க… உயர்க… உயர்ந்தோங்கி வாழ்க..!
– ரியாஸ்
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை