கண்ணின் ஓரத்தில்
அவள் வாசத்தை மூச்சாய் கொண்டவன், பேச்சை நாளாக நினைப்பவன், விழியோரத்தில் கண்ணீர் வந்தால் எப்படித் தாங்குவான்?
*
கண்ணின் ஓரத்தில் –
கண்ணீர் வந்திட்டால்..
தாங்குவேனோ –
காதலி..
நெஞ்சின் ஈரத்தில் –
தூரம் தந்திட்டால்..
தூங்குவேனோ –
காதலி..
உந்தன் வாசம்தான் –
எந்தன் மூச்சென்பேன்..
உந்தன் பேச்சில்தான் –
எந்தன் நாளென்பேன்..
நீ இல்லா –
வாழ்க்கையும் ஏதடி?
*
வாழும் கணம் –
கனமாகுதே..
வீழும் மழை –
அழலாகுதே..
நானோ என்னில் –
வேறாகிறேன்..
நீயும் இல்லா –
பேராகிறேன்..
ஓடோடி வந்தால் –
வேரோடிப் போவேன்..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.