ஆகாசம் நீலநெறம்
வைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்.
*
ஆகாசம் நீலநெறம் –
ஆழ்கடலு மனசுக்குள்ள..
வச்சிப்புட்டா ஆசவொண்ணு –
வைகற கோழிங்களே..
கூவுங்க கவித சொல்லி –
தாவுங்க எட்டி எட்டி..
கேளுங்க காத தீட்டி –
ஆடுங்க தட்டி தட்டி..
இவ பாட்டக் கேட்டு –
தலயாட்டும் ஆட்ட..
ஒன் வீட்டக் காட்டி –
அனுப்பி வச்சா..
மல்லாட்டப் போருல –
செத்தத்தான் எடுத்து..
ஒன் பேச்ச சேத்து –
கொடுத்தனுப்பேன்..
*
அடடே ஆளுங்கிறுக்கா –
ஒண்ணால ஆனா கிறுக்கா..
ராத்தூக்கம் காணல காணல –
கனா மட்டும் காணுறா..
சேட ஓட்டும் கறுப்பா –
சேதியேதும் இருக்கா..
கா(த்)தோட சொன்னா –
கசங்காம போவும்..
கொம்புத்தேனுக் கணக்கா –
நெனப்பெல்லாம் சொட்ட..
மல்லிப்பூவா சிரிப்பா –
மஞ்சம்புல்லா எரிப்பா..
ஆகாசம் நீலநெறம் –
ஆழ்கடலு மனசுக்குள்ள..
*
குரல் : மீனாட்சி தேவராஜன்
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.