வா வா

கைகள் கோத்துக்கொண்டு எல்லையெல்லாம் கடந்து செல்ல, தன் ஆருயிர் காதலியை ‘வா வா’ என அன்புருக மென்மொழியில் அழைக்கிறான்.

*

வா வா – வா வா – வா வா –

கையக் கோத்து நடக்கலாம்..

தா தா – தா தா – தா தா –

எல்லை எல்லாம் கடக்கலாம்..

முத்தம் ஒண்ணு வச்சி –

யுத்தம் தொடங்கலாம்..

மெல்ல மெல்ல தச்சி –

கொள்ள நனையலாம்..

அச்சம் ஏதும் இன்றி –

மிச்சம் வைக்கலாம்..

வச்சி வச்சி சொச்ச –

அன்பில் அணையலாம்.. 

*

சுழலும் பூமியை –

திருப்பி சுழட்டலாம்..

நீளும் வானத்தை –

சுருட்டி மடக்கலாம்..

ஓடும் காற்றை –

பிடித்து வைக்கலாம்..

ஒளிரும் நிலவை –

ஒளித்து வைக்கலாம்..

இதுவரை இல்லா –

உருவம் சூடி..

உயிருக்குள் உயிரை கோப்போமே..

இதுவரை சொல்லா –

கவிதை தேடி..

இனிமை சேர்ப்போமே..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=