உயிரும் உயிரும்

காதல் இருந்தும் வாழும். இறந்தும் வாழும். காதலுக்கு ஏது வயது? காதலுக்கேது இறப்பு?

*

உயிரும் உயிரும் –

உரசிக்கொள்ளும் காதல் எது?

கண்களும் கண்களும் –

கதைத்துக்கொள்ளும் காதல் அது!

உணர்வும் உணர்வும் –

உயிர்த்துக்கொள்ளும் காதல் எது?

காமமும் காமமும் –

கடந்தரும்பும் காதல் அது!

மூச்சு அது –

நிற்கும் வரை..

பேச்சு அது –

நிற்காது..

மூச்சு அது –

நின்ற பின்னும்..

பேச்சு அது –

குறையாது..

காதல் –

இந்தக் காதல் –

வயதை கடந்தது!

காதல் –

இந்தக் காதல் –

இறந்தும் வாழ்வது!

உயிரும் உயிரும் –

உரசிக்கொள்ளும் காதல் எது?

கண்களும் கண்களும் –

கதைத்துக்கொள்ளும் காதல் அது!

*

குரல் : ஷ்ரவன் கலை            

உயிரோவியம் :  மீரா

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=