உயிரந்தம்

காலக்கடைசி சொட்டை
பருகினேன்
முதல்சொட்டில் நின்று

வானிறுதி முனையைத்
தீண்டினேன்
தொடக்கமுனையிலிருந்து

நுனிக்கிளையிலிருந்து
துண்டித்தேன்
அடிவேரை

எல்லாம் முடிகிறது
என்றபோதும்
எதுவும் தேவையில்லை
இப்போதெல்லாம்

எனினும்
உயிரின் அந்தத்தை
பருகவேண்டும்
ஆதியிலிருந்து

அவ்வளவுதான்
வேண்டியதில்லை
பிறிதொன்றும் எனக்கு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=