திமிருடல்


ஒரு பசி
பசியாக இருப்பதில்லை
பசியின்போதும்
பசியற்ற நிலையிலும்

ஒரு கண்ணீர்
கண்ணீராக இருப்பதில்லை
கண்ணீரின் போதும்
கண்ணீரற்ற நிலையிலும்

ஓர் உயிர்
உயிராக இருப்பதில்லை
உயிரின்போதும்
உயிரற்ற நிலையிலும்

எதிரும் புதிருமான
அந்தரத்தில்
இசைய
அசைய எத்தனித்து
தாவி நின்றது
கிழிந்துபோன காலம்

ஒன்றன்மீது ஒன்றாக
ஒன்றுக்குள் ஒன்றாக
அடர
படர வேர்பரப்பி
புன்னகைத்தது
கசங்கிப்போன ஆசை

இருந்தும்
எப்படியோ என்னை
சுமந்து வெளியேறியது
நானெனும்
திமிருடல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=