சொல்லன்றி எதுவுமற்றவன்! – 326
அரசின் அறநிலையத்துறை, மடங்கள் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் இன்றைக்கு கோயில்கள் முதலான கலைச்செல்வங்கள் இருக்கையில், தனிமனிதர்களையும், சமூகத்தையும் நீங்கள் இந்தளவுக்கு குறை சொல்வது ஏன்?
ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அமைப்பின், அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதில் உள்ள தனி மனிதருக்கு அவற்றைப் பற்றின அடிப்படை அறிவும், ஆர்வமும் இல்லை என்றால், அது நிச்சயம் அழிவை நோக்கிதான் இட்டுச்செல்லும். அப்படி இன்றைய கலைச் செல்வங்களில் சரிபாதி அழிந்துவிட்டன. மீதமும் அழியும் நிலையில் உள்ளன.
இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். கோயில்களில் உள்ள சிற்பங்களையும், தூண்களையும் பராமரிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மணல் கொண்டு வேகமாக அடித்துச் செய்யும் ‘மணல் பூச்சு முறை’. இதனால் சிற்பங்களும், தூண்களும் வெகுவாக சேதமாகும் என்பதால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தமுறை தடை செய்யப்பட்டது.
ஆனால், இது பற்றின தெரிதலும், புரிதலும் இல்லாத மூடர்கள்தான் இன்றைக்கு மிகுதியான கோயில்களை கும்பாபிஷேகம் செய்கிறேன், புனரமைக்கிறேன் என்ற பெயரில் இம்முறையைப் பின்பற்றி நல்லது செய்வதாய் சொல்லிக்கொண்டு, அழகிய வேலைப்பாடு மிக்க சிற்பங்களையெல்லாம்; தூண்களையெல்லாம் அழித்து வருகின்றனர். இப்படி இன்னும் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.
[இன்னும்]
*