மழை வான் மறப்ப
ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்.
*
மழை வான் மறப்ப –
மரம் மண் மறப்ப –
தேன் வண்டு மறப்ப –
பண் யாழ் மறப்ப..
அலை கடல் மறப்ப –
நீர் மீன் மறப்ப –
வேர் மலர் மறப்ப –
சேய் தாய் மறப்ப..
*
எல்லாம் இங்கு மறப்ப –
உன்னை யான் நினைப்ப –
என்னை நான் மறப்ப.. ஆ…
மழை வான் மறப்ப –
மரம் மண் மறப்ப –
தேன் வண்டு மறப்ப –
பண் யாழ் மறப்ப..
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.