சொல்லின்றி எதுவுமற்றவன்! – 148

ஆமாம். இத்தேடல் குறையாமல் இருப்பதால்தான், உங்கள் வயதுடைய படைப்பாளிகள் புனைவிலேயே தேங்கி இருக்கையில், அவர்களிலிருந்து வேறுபட்டு நீங்கள் இதுபோன்ற பெரும் படைப்புகளை படைக்க முடிகிறது. சரி, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டிய அளவுக்கு ஏன் பக்தி இலக்கியப் பாடல்களை காட்டவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 146

‘வடம்’ என்ற சொல்லுக்கான பொருளை நீங்கள் தேடிப் போனதையும், அது உங்களைத் தேடி வந்ததையும் மிக அழகாக விவரித்து இருப்பீர்கள். இன்னோர் இடத்தில் உங்களூர் அருகில் ஓடும் தென்பெண்ணை ஆற்றுக்கு, அதன் கரைகளில் பனைமரம் மிகுந்திருப்பதால் பனையின் இன்னொரு பெயரான பெண்ணை வந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருப்பீர்கள். இத்தேடல் குறித்து சொல்லுங்கள்… சொற்கள் மீதான ஆர்வமும், தேடலும் சிறுவயது முதலே எனக்குள் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது பின்னாளில் வாசிக்கத் தொடங்கியதும் அதிகமாகி என் எழுத்திலும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. என் கிராமத்தின் பட்டப் பெயரான ‘முரம்பு’வையே எடுத்துக் கொள்வோம். சொல் மீதான அளவுகடந்த மோகம் இருந்ததால்தான் அச்சொல், ‘நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி முரம்புகண் உடைய ஏகி’  எனக் குறுந்தொகையிலும் (400), ‘பரன்முரம்பாகிய பயமில் கானம்’ என அகநானூறிலும் (5), ‘முரம்பு கண்ணுடைந்த நடவை தண்ணென’ என்று…

Read More
எழுத்தளவு-+=