சொல்லின்றி எதுவுமற்றவன்! – 146
‘வடம்’ என்ற சொல்லுக்கான பொருளை நீங்கள் தேடிப் போனதையும், அது உங்களைத் தேடி வந்ததையும் மிக அழகாக விவரித்து இருப்பீர்கள். இன்னோர் இடத்தில் உங்களூர் அருகில் ஓடும் தென்பெண்ணை ஆற்றுக்கு, அதன் கரைகளில் பனைமரம் மிகுந்திருப்பதால் பனையின் இன்னொரு பெயரான பெண்ணை வந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருப்பீர்கள். இத்தேடல் குறித்து சொல்லுங்கள்…
சொற்கள் மீதான ஆர்வமும், தேடலும் சிறுவயது முதலே எனக்குள் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது பின்னாளில் வாசிக்கத் தொடங்கியதும் அதிகமாகி என் எழுத்திலும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.
என் கிராமத்தின் பட்டப் பெயரான ‘முரம்பு’வையே எடுத்துக் கொள்வோம். சொல் மீதான அளவுகடந்த மோகம் இருந்ததால்தான் அச்சொல், ‘நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்புகண் உடைய ஏகி’ எனக் குறுந்தொகையிலும் (400), ‘பரன்முரம்பாகிய பயமில் கானம்’ என அகநானூறிலும் (5), ‘முரம்பு கண்ணுடைந்த நடவை தண்ணென’ என்று மலைபடுகடாமிலும் (432) ஆளப்பட்டிருப்பதைக் கண்டு ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தேன்.
பின் அந்தச் சொல்லில் பித்து கொண்டதால்தான் அப்பெயரிலேயே எனது முதல் நாவலை எழுதினேன்; ஒரு பதிப்பகமும் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக இப்போது எங்களூர் மக்கள் பேசும் சொற்களை மாத்திரம் கொண்டு ‘முரம்பு கிராமியச் சொல்லகராதி’யும் உருவாக்கி வருகிறேன்.
[இன்னும்]
*