சொல்லன்றி எதுவுமற்றவன்! – 357
சரி, எழுத்துக்கு வருவோம். முந்தைய தலைமுறையினர் பேப்பர், பேனா கொண்டு எழுதினார்கள். இன்றோ, கணினியில் எழுதுகிறீர்கள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். எனினும், பேப்பர், பேனா கொண்டு எழுதுவதே மனத்துக்கு மிக உவப்பானதாக இருக்கிறது. எல்லா நேரமும் என்று சொல்லமாட்டேன். மிகுதியான நேரம். மற்றபடி நேரடியாக கணினியில் தட்டச்சு செய்து எழுதுவதும், நகர்பேசி மூலமாக எழுதுவதும் குறைந்தது கிடையாது. அது ஒருவகை உவப்பை; வசதியை தருகிறது. அவ்வளவுதான்.
காலத்துக்கேற்ப எதையும் ஏற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் எனக்கு இரண்டுமே ஏற்புடையதுதான்.
[இன்னும்]
*