சொல்லன்றி எதுவுமற்றவன்! – 350
ஹாஹா… நிச்சயம் செல்வோம். இந்தியா பெயரை ‘பாரத்’ என மாற்ற முற்படுகிறார்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஆஹா… இது அதைவிடக் கடினமானக் கேள்வியாச்சே! (சட்டென்று பதில் சொல்லாமல், சிலநொடி யோசனைக்குப் பின் சொன்னார்.)
அது என்னவோ தெரியவில்லை, அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் பற்றியும் சிறுவயது முதலே எனக்குள் ஓர் ஒவ்வாமை உருவாகிவிட்டது. அதற்கான முக்கியக் காரணம் அவர்களது அறமற்ற சுயநலப் போக்கும், அர்த்தமற்ற செயல்பாடுகளும்தான். அந்த வகையில்தான் இந்தப் பெயர் மாற்றம் செய்ய முற்படுவதையும் பார்க்கிறேன். இதெல்லாம் ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது என்பது என் எண்ணம்.
[இன்னும்]
*