சொல்லன்றி எதுவுமற்றவன்! – 349
இலக்கிய முன்னோடிகளாக ஜெயகாந்தன் முதலான பெயர்களை சொன்னீர்கள். இதனை சற்று விரித்து அதாவது, சங்க காலம் முதல் கடந்த நூறாண்டுகளுக்கு முன்னானவர்கள் வரை சொல்லச் சொன்னால் யாரைச் சொல்வீர்கள்?
(சிறிதும் யோசிக்காமல் முறுவலித்துவிட்டு) கபிலர், ஒளவை, இளங்கோ, வள்ளுவர், நம்மாழ்வார், ஆண்டாள், மாணிக்கவாசகர், கம்பர், சேக்கிழார்…
(சொல்லிவிட்டு தனதறையில் இருந்த நூலத்தைப் பார்த்து தனக்குள் எதையோ கூறிக்கொண்டு தொடர்ந்தார்)
இருப்பதிலேயே மிகக் கடினமான வேலை என் பொருத்தவரை இதுபோல் பட்டியல் போடுவதுதான். அதனால் மனத்தில் சட்டென உதித்த பெயர்களை சொல்லி இருக்கிறேன். தயவுசெய்து இதோடு முடித்துக் கொண்டு, வேறு கேள்விக்கு செல்வீர்கள் என நம்புகிறேன்.
[இன்னும்]
*