சொல்லன்றி எதுவுமற்றவன்! – 341
முதல் நூலிலேயே நாஞ்சில்நாடன், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு வாய்த்திருக்கிறது‘ என்று கூறியிருப்பார். அதற்கேற்ப நீங்களும் தொடர்ந்து பல தாவரங்கள் பற்றி பதிவு செய்துவருகிறீர்கள். இதன் அடுத்தக் கட்டம் அல்லது வருங்கால திட்டம் என்னவாக இருக்கும்?
முழுக்க முழுக்க தாவரங்களுக்காகவே ஒரு மின்னிதழ் கொண்டுவரும் திட்டம் உள்ளது. புனைவு, அபுனைவு என எல்லாம் அதில் இடம்பெற்றாலும், அது முதன்மையாக தாவரங்களை மையப்படுத்தியே இருக்கும்.
சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை தாவரங்கள் பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அதில் கொண்டுவரும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்.
[இன்னும்]
*