சொல்லன்றி எதுவுமற்றவன்! – 339
உங்களது இந்த ஆர்வமும், ஈடுபாடும்தான் மற்ற இளம் படைப்பாளர்களிடமிருந்து உங்களை தனித்துக் காட்டுகிறது. சரி, அடுத்தக் கேள்விக்கு வருகிறேன். உங்களூர் அருகில் இருக்கும் சின்னையன்பேட்டை காமக்குளம் பற்றி எழுதிய நீங்கள், அதை முழுக்க முழுக்க கலைப்படைப்பாகவே எழுதியிருப்பீர்கள். இந்தப் பார்வையை இலக்கியம்தான் தந்ததா?
ஆமாம். எனினும், இலக்கியம் வாசிப்பதற்கு முன்னால் அதாவது, இலக்கியப் பரிச்சயம் இல்லாத சிறுவயதிலேயே அக்குளம் பற்றிய, அதன் பின்னுள்ள உண்மைக் கதையை கேட்டறிந்ததும் இந்தப் பார்வை ஓரளவுக்கு வந்துவிட்டது. ஒருவகையில் இதனை நாட்டார் இலக்கியம்தான் அதாவது, வாய்மொழி இலக்கியம்தான் தந்தது என்று சொல்லலாம்.
[இன்னும்]
*