சொல்லன்றி எதுவுமற்றவன்! – 332

இந்த இடத்தில் இன்னொரு கேள்வி. முன்னெல்லாம் இயற்கையும், கலைகளும் பெருமளவு படைப்பில் அதாவது, இலக்கிய ஆக்கங்களில் இடம்பெற்றன. ஆனால், சமீபத்தில் அது குறைந்ததாய் தோன்றுகிறதே?

உண்மைதான். அதற்கான முக்கியக் காரணம், அவை பற்றின அறிவும், ஆர்வமும் படைப்பாளிகளிடம் போதிய அளவு இல்லாததுதான்.

தாவரங்களையே எடுத்துக் கொள்வோம். சங்கப் பாடல்களில் மிகுதியாக தாவரங்கள் இடம்பெற்று இருக்கக் காரணம், அன்றைய மக்கள் வாழ்வில் தாவரங்கள் ஒன்றரப் பிணைந்து இருந்ததும், அவற்றைப் பற்றின அறிவு புலவர்களுக்கு மிகுந்திருந்ததும்தான். ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய படைப்பாளிகளில் பலருக்கு இவ்வாற்றல் இல்லாததால்தான் அவர்களது படைப்புகளில் தாவரங்கள் இடம்பெறுவதில்லை.

நொச்சி அரும்பு நண்டின் கண்ணைப் போன்று இருந்ததையும், புன்னை அரும்பு பல்லி முட்டை போன்று இருந்ததையும், அவரைப் பூ கிளியின் மூக்கு போன்று இருந்ததையும் கண்டதால்தான், அன்றைய சங்கப் புலவர்கள் அவற்றை தம் பாட்டில் உவமையாக வைத்துப் பாடியிருக்கிறார்கள்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அதுதானே வெளியே வரும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 331

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=