சொல்லன்றி எதுவுமற்றவன்! – 333
நட்புக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் தருபவர் நீங்கள். இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது உங்களுக்கு?
என் தந்தையிடம் இருந்துதான். அவருக்கு இருந்த நண்பர்களையும், அவர்களுக்கு இடையிலான அழகான நட்பையும் சிறுவயது முதல் கண்டு வளர்ந்தவன் என்பதால், அது தானாகவே எனக்குள்ளும் நிறைந்திருக்கிறது.
இன்றைக்கு என்னைச் சுற்றி இருப்பவர்களில் அதிகமானவர்கள் நண்பர்களே. அது தேநீர்க் கடை அண்ணனில் ஆரம்பித்து, மிகப்பெரும் ஆளுமைகள் வரைக்கும் நீளக் கூடியது. எனக்கு ஒன்று என்றால் எல்லோரும் ஓடிவருவார்கள். அந்தளவுக்கு நட்பு எங்களைப் பிணைத்திருக்கிறது.
[இன்னும்]
*