சொல்லன்றி எதுவுமற்றவன்! – 297
எனினும் சில படைப்புகள், அவற்றில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லாதபோதும், பெரிதாகப் பேச வைக்கப்படுகிறதே?
ஆமாம். இதுவும் ஒருவகை அரசியல்தான். வணிக யுக்திதான்.
இங்கே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். என்னதான் ஒரு படைப்பு பண பலம், படை பலம், பதவி பலம், அதிகார பலம் போன்ற பலங்கள் கொண்டு பேச வைக்கப்பட்டாலும் அதற்கான தகுதி அவற்றுக்கு இல்லாதபோது அவை தானாகவே காலத்தில் இல்லாமல் போய்விடும்.
அதேநேரம், இதற்கு அப்படியே நேர்மாறாக ஒரு தகுதியானப் படைப்பு, அவை வெளிவந்த காலத்தில் பேசப்படவில்லை என்றாலும், வாசகர்களால் கண்டுகொள்ளப்பட்டு காலத்தில் நிற்கும். படைப்புகள் விஷயத்தில் காலத்தின் முன்னால் தயவு தாட்சண்யமே கிடையாது என்பது எழுதப்படாத விதி.
[இன்னும்]
*