சொல்லன்றி எதுவுமற்றவன்! – 228
இன்றைக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான கடவுளர் வடிவங்களில் உங்களுக்குப் பிடித்ததாக எதைச் சொல்வீர்கள், ஏன்?
ஆடல் வல்லான் என்று சொல்லக்கூடிய நடராஜர் வடிவத்தை மனத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்வேன். ஏனெனச் சொல்லப் புகுந்தால், ஒரு நூல் அளவுக்குப் போகும். அதனால், மிக சுருக்கமாகவே சொல்கிறேன்.
கலைக்கெல்லாம் தலையான ஆடல் கலையை பறைசாற்றும் உயரிய தத்துவ வடிவம். காணக் காண இன்னும் இன்னுமாய் எண்ணத்தை கிளறிவிடும் உருவகம். ஒரு காதில் தோடு, மறு காதில் குழை என தன்னவளுக்காக தன்னில் பாதியை ஈந்த பாங்கு. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
[இன்னும்]
*