சொல்லின்றி எதுவுமற்றவன்! – 176
உண்மைதான். நானும் கூட இவ்வாறு எண்ணியதுண்டு. என்றாலும், காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாமல் போய்விடும் என்று தோன்றும். நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.
ம்… நன்றாகவே புரிகிறது.
ஆனால், அதனால் என்ன பிரயோஜனம்? அவர்களது நோக்கம், அந்தப் படைப்பு காலத்துக்கும் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக தற்காலத்தில் சாதிவெறியை தூண்டிவிட்டு, அதனால் பெரும் பண பலத்தையும், படை பலத்தையும் ஈட்டி அதிகாரத்தை பிடிப்பது. குறைந்து வரும் சாதியத்தை வேறுவேறு வகையில் அதிகப்படுத்தி, தாமும் தம்மைச் சார்ந்தவர்களும் அதனால் பலன் அடைவது.
தம் திட்டத்தில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். மக்கள்தான் அது புரியாமல் சிக்கிச் சீரழிந்துபோகிறார்கள்.
[இன்னும்]
*