சொல்லின்றி எதுவுமற்றவன்! – 166
எங்கோ இருக்கும் முகம் தெரியாத ஒருவர் உங்கள் திருமணத்திற்காக பனைமாலை அனுப்பி வைத்தது தொடங்கி… உங்கள் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் வீட்டுக்கு அழைத்து உங்கள் இருவருக்கும் விருந்து வைத்து வேட்டி – சேலை வழங்கியது வரை பல நெகிழ்ச்சியான சம்பவங்களை இந்நூலெங்கும் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் திருமணத்தை ஒட்டி நிகழ்ந்த இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?
(தனக்குள் சில நொடிகள் யோசித்தபடி லேசாக தலையாட்டியவர்)
யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் நமது வாழ்வை அறத்துடன் வாழ்ந்தால், நமக்கான எல்லாம் அதுவாகவே நன்முறையில் நடக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். அதுதான் எங்கள் திருமண விஷயத்திலும், அதை ஒட்டிய நிகழ்வுகளிலும் நடந்ததாக நினைக்கிறேன்; பார்க்கிறேன்.
[இன்னும்]
*