இணைப்பூ
என்றோ கிறுக்கியது
நெடுநெடுவெனப் பூத்து
காதற்கடவுச்சொல்லானது
கள்ளிச்செடி இளமையுடன்
பூக்களுள் பூவாக
சிரித்திருந்த சொல்
அடர்ந்து விரிந்தது
சொல்லாகி சொல்லாக
முள்ளுக்கும் மரத்துக்கும்
காவலாகி நிற்க
நினைவின் ரீங்கரித்த நொடிகள்
சட்டென மறைந்துபோனது
சொட்டுப் பாலாகி
கோடையிலும் பூத்திருக்கத் தெரிந்தது
எப்படிக் கேட்க
செத்தபின்னும் உயிர்த்திருக்கும் வித்தை மறைத்து
புள்ளியாய் சிரித்தது
அவ்விணைப்பூ