சொல்லின்றி எதுவுமற்றவன்! – 216
ஆயிரம்தான் சொன்னாலும் அச்சில் வாசிக்கும் இன்பத்தை இணையமும், மின்நூல்களும் கொடுப்பதில்லையே?
இது ஓரளவுக்குதான் உண்மையே தவிர முழுதும் உண்மையல்ல.
நாம் முதலில் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பம் முதல் அச்சில் பார்த்து வாசித்துப் பழகி இன்பம் கண்டவர்களுக்கு மட்டுமே இணையமும், மின்நூல்களும் அவற்றுக்கு எதிரான ஒன்றாகத் தெரியும். ஆனால், இத்தலைமுறையினர் எடுத்த உடனேயே மின்நூல், கிண்டில், இணையம் என்று வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் நாம் எழுத்தில் அடைந்த இன்பத்தை இவர்கள் இவற்றில் அடைகிறார்கள்.
ஆக, ஒருவரது மனம்தான் காரணமே தவிர அச்சா, இணையமா என்பது முக்கியமல்ல. என்னைக் கேட்டால், எப்படியாவது வாசிக்கட்டுமே என்றுதான் சொல்வேன். அது அச்சிலா, இணையத்திலா என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.
[இன்னும்]
*