சொல்லின்றி எதுவுமற்றவன்! – 167
உங்கள் முதல் நாவலான ‘முரம்பு’ இதுவரை தமிழ் இலக்கியம் பேசாத நிலத்தையும், மக்கள் வாழ்வையும் பேசியிருப்பதாக நினைக்கிறேன். எழுதிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
(மிகச் சின்னதாக சிரித்து ‘ஆமாம்’ என்று தலையாட்டியவர்)
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிக முக்கியமாக பல புதிய மண் சார்ந்த சொற்கள் இந்நூல் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, தெரட்டி, பொனக்கட்டை, சோமம், வர்ணக்கோல், தமட்டை, பொடை. பல சடங்கு சம்பிரதாயங்களும், விழாக்களும் பேசப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக, பச்சை வைத்தல், வர்ணக்கோல் செய்து வைத்து வணங்குதல், மன்மதன் தகனம் முதலியவை.
[இன்னும்]
*