சொல்லின்றி எதுவுமற்றவன்! – 116
அறுபது வயது கடந்தவர்களை குழந்தையாகப் பார்க்கும் உங்கள் பார்வை சரிதானா? என்ற கேள்வி குழந்தைமை கடிதம் வாசித்ததும் எழுந்தது. இது குறித்து…
இதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது? சரி, என்று தோன்றியதால்தான்; உணர்ந்ததால்தான் இப்படி ஒரு கடிதத்தை எழுதினேன். அதிலும் உச்சமாய் ‘ஐயா’ நூலின் தலைப்பில் ‘குழந்தை’ (ஐயா (எ) 95 வயது குழந்தை!) என்ற வார்த்தையை வைத்தேன்.
குழந்தைகள் என்பவர்கள் எதுவும் தெரியாமல் பூமிக்கு வந்து புதிது புதிதாகக் கற்று வளர்பவர்கள் மாத்திரமல்ல… தாம் கற்றதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து தேய்பவர்களும்தான். அவ்வகையில் ஒருவரின் இரண்டாம் குழந்தைப் பருவம் என்று கூட இதனைச் சொல்லலாம்.
[இன்னும்]
*