சொல்லின்றி எதுவுமற்றவன்! – 063
தொடர்ந்து தனிப்பாடல்கள் பற்றி பேசி வருகிறோம். உங்கள் ‘அந்தமான் காதல்’ பற்றி சொல்லுங்கள்.
‘அந்தமான் காதல்’ மிக அழகான ஒரு காதல் பாடல். அந்தமானை சுற்றிப் பார்க்கப் போன ஒரு பெண்ணுக்கும், அங்கே இருக்கும் ஓர் ஆணுக்கும் இடையே மலரும் காதலை சொல்லாலும், இசையாலும், காட்சியாலும் போட்டி போட்டுக்கொண்டு சொல்ல முயற்சித்திருப்போம்.
‘இந்தக் காதல் ஒன்றால்தான் –
பூமி சுத்துதே…
அந்த வானம் கூடத்தான் –
மேலே நிற்குதே…’
இப்போது கேட்டாலும் காதலின் சில்லிப்பும், அந்தமானின் அழகும், வசீகரமும், வண்ணகரமும் நெஞ்சுக்குள் சட்டென தொற்றிக் கொள்ளும். அதுதான் இந்தப் பாடலின் சிறப்பே.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 062